நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

உள்நாட்டுப் பாதுகாப்பு: அமித் ஷா தலைமையில் அவசர ஆலோசனை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பாக வியாழக்கிழமை அவசர ஆலோசனை நடைபெறுகிறது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 8:05 am

ANI

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பாக வியாழக்கிழமை அவசர ஆலோசனை நடைபெறுகிறது.

இந்த உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறை செயலர் ராஜீவ் கௌபா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

முன்னதாக, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பிரசாரங்களில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம், 35-ஏ மற்றும் 370 சிறப்பு சட்டப்பிரிவு நீக்கம் உள்ளிட்டவை உறுதியாக அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாஜக மீண்டும் ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட அமித் ஷா, உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் கடந்த சனிக்கிழமை சிறப்புக் கூட்டம் நடத்தினார்.

அப்போது பயங்கரவாத மற்றும் மாவோயிஸ்ட் தடுப்பு நடவடிக்கைகளை கடுமைப்படுத்தப்படுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.