திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

தெலங்கானாவில் 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் டிஆர்எஸ் கட்சியில் இணைய முடிவு

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் வகையில், 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இணைய உள்ளனர்.

News image
Updated On :6 ஜூன் 2019, 10:11 am


ஹைதராபாத்: தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் வகையில், 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இணைய உள்ளனர்.

இது குறித்து இன்று தெலங்கானா சட்டப்பேரவை சபாநாயகர் ஸ்ரீனிவாஸ் ரெட்டியை சந்தித்துப் பேசிய 12 எம்எல்ஏக்களும் தங்களது பிரதிநிதித்துவத்தை காங்கிரஸ் பேரவை உறுப்பினர்கள் என்பதில் இருந்து மாற்றி ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியாக மாற்றும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

119 உறுப்பினர்களைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவையில், கட்சியின் தெலங்கானா மாநிலத் தலைவர் உத்தம் குமார் ரெட்டி, நல்கொண்டா மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் பலம் 18 ஆகக் குறைந்தது.

தற்போது மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்களும் டிஆர்எஸ் கட்சிக்கு மாறுவதற்கு முடிவு செய்துள்ளனர். இவர்களது கோரிக்கையை சபாநாயகர் ஏற்கும்பட்சத்தில் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்க நேரிடும். 

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தெலங்கானா பேரவைத் தேர்தலில் டிஆர்எஸ் கட்சி 88 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.