அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

ஒரு குழந்தை இதோ இருக்கு, மற்றொன்று எங்கே? கவலையோடு கேட்டுக்  கொண்டிருக்கும் தாய்!

ஒரு குழந்தை இதோ இருக்கு, மற்றொரு குழந்தை எங்கே? என்று கவுண்டமணி போல கேட்டதையே திருப்பிக் கேட்டுக் கொண்டிருக்கிறார் இரட்டைக் குழந்தைகளின் தாய்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:32 am

ENS

ஒரு குழந்தை இதோ இருக்கு, மற்றொரு குழந்தை எங்கே? என்று கவுண்டமணி போல கேட்டதையே திருப்பிக் கேட்டுக் கொண்டிருக்கிறார் இரட்டைக் குழந்தைகளின் தாய்.

ஜெய்ப்பூரில் உள்ள ஜனனா மருத்துவமனையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கர்ப்பிணிக்கு பிரசவத்துக்கு முன்பு நடத்தப்பட்ட ஸ்கேன் பரிசோதனைகளில் அவருக்கு இரட்டைக் குழந்தைகள் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பிரசவத்தின் போது அவருக்கு ஒரே ஒரு குழந்தை பிறந்திருப்பது உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து தாயின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகாரளித்ததன் அடிப்படையில், மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதற்கு பதிலளித்த ஊழியர்கள், கருப்பைக்குள் ஒரு குழந்தை மற்றொரு குழந்தையோடு சண்டையிட்டிருக்கும், இதில் ஒரு குழந்தை வயிற்றிலேயே இறந்திருக்கும் என்று கூறியுள்ளனர்.

கடந்த ஜூன் 19ம் தேதி தனியார் ஸ்கேன் மையத்தில் ராமாதேவிக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டு, ஜூலை 9ம் தேதி ஜனான மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை முறையில் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

இது பற்றி சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுத்த மருத்துவர் கூறுகையில், ஸ்கேன் பரிசோதனையில் இரண்டு குழந்தைகள் இருப்பது போலத் தான் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்தோம். ஒரு குழந்தைதான் இருந்தது. இது எப்படி நடக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என்று கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியவரே, கேள்வியை எழுப்பியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.