புது தில்லி: கர்நாடகாவில் நடைபெறும் அரசியல் சர்ச்சைகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று மக்களவையில் கோஷம் எழுப்பினார்.
17வது மக்களவையில் முதல் முறையாக ராகுல் காந்தி இவ்வாறு ஒரு பிரச்னை குறித்து கோஷம் எழுப்பியுள்ளது இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மதியத்துக்கு மேல் மக்களவைக்கு வந்தார் ராகுல். அப்போது கர்நாடகாவில் ஆளும் கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்களை வாங்க பாஜக குதிரைபேரத்தில் ஈடுபடுவதாக காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி கோஷம் எழுப்பினார்.
அவருடன் ஜனநாயகத்தைக் காப்பது உங்கள் கடமை என்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.
இதற்கு அவைத்தலைவர் பதில் அளித்தும், அதனால் திருப்தி அடையாத காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் சேர்ந்து ராகுல் காந்தியும் கோஷத்தில் ஈடுபட்டார். ஆனால் என்ன அவரது கோஷம், மற்ற உறுப்பினர்களின் கோஷத்துக்கு ஈடு கொடுக்கவில்லை. பிறகு, கோஷத்தின் கடைசி வார்த்தையை மட்டும் சேர்ந்து சொல்லத் தொடங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வந்தே பாரத் ரயில் தடம் புரண்டது!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் த.வெ.க. தலைவர் விஜய் தரிசனம்!

இந்தியாவின் கண்ணியத்தில் சமரசம் கூடாது!

கை கழுவலாகாது!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


