மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

தன்னைத் தோற்கடித்தவர்களை நாளை நேருக்கு நேர் சந்திக்கவிருக்கிறார் ராகுல்

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் நாளை அமேதி தொகுதிக்குச் செல்லவிருக்கிறார்.

News image
Updated On :9 ஜூலை 2019, 7:59 am


அமேதி: காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் நாளை அமேதி தொகுதிக்குச் செல்லவிருக்கிறார்.

அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல், அங்கு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியைத் தழுவினார்.

மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு, நாளை முதல் முறையாக அமேதி செல்லவிருக்கிறார் ராகுல் காந்தி.

இந்த பயணத்தின் போது, கட்சி பிரதிநிதிகள், வாக்குச்சாவடிக்கான காங்கிரஸ் பிரதிநிதிகள் உள்ளிட்டோரையும் ராகுல் காந்தி சந்திக்கவிருப்பதாகவும், தனது தோல்விக்கான காரணத்தைக் கண்டறிய ராகுல் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

அதே சமயம், அமேதியில் உள்ள சில கிராமங்களுக்கும் ராகுல் காந்தி சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

1999ம் ஆண்டு முதல் அமேதியில் போட்டியிட்டு வரும் ராகுல் காந்தியை, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், ஸ்மிருதி இரானி 52 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.