திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

சந்திரயான் -2 விண்ணில் ஏவப்படுவதை நேரில் பார்க்க விருப்பமா? முந்துங்கள் 5,000 பேருக்கு மட்டுமே வாய்ப்பு

நிலவில் இறங்கி ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக ரூ.603 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள சந்திரயான்-2 விண்கலம் ஜூலை 15-ஆம் தேதி நிலவுக்குப் பயணமாகிறது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:26 am

ENS

நிலவில் இறங்கி ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக ரூ.603 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள சந்திரயான்-2 விண்கலம் ஜூலை 15-ஆம் தேதி நிலவுக்குப் பயணமாகிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதை பொதுமக்கள் நேரடியாகப் பார்க்க ஏற்பாடு செய்வது என்று இஸ்ரோ முடிவெடுத்து அதற்கான அறிவிப்பையும் மேற்கொண்டுள்ளது.

எப்படி முன்பதிவு செய்வது?
ஜூலை 4ம்தேதி நள்ளிரவு 12.00 மணிக்கு மேல்தான் ஆன்லைன் மூலம் பொதுமக்கள் முன்பதிவு செய்ய முடியும்.
சதீஷ் தவான் ஸ்பேஸ் சென்டரின் இணையதளமான www.shar.gov.in இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.

அந்த இணையதளத்தில் 4ம் தேதி நள்ளிரவுக்கு மேல் முன்பதிவுக்கான பிரத்யேக இணைப்புக் கொடுக்கப்படும்.

விண்கலம் ஏவப்படுவதைப் பார்க்க ஏற்பாடு செய்திருக்கும் அரங்கில் 5000 பேர் மட்டுமே இருக்க முடியும் என்பதால் 5000 பேர் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். முதலில் வருவோருக்கு இந்த வாய்ப்பு கிட்டும்.

இந்த அரங்கு, விண்கலம் ஏவப்படும் ஏவுதளத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இருக்கும்.

இஸ்ரோவின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடுவதற்காக சந்திரயான்-2 விண்கலம் ஜூலை 15-ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-மார்க் 3 ராக்கெட்டின் வழியாக ஏவப்படுகிறது.

சந்திரயான்-2 விண்கலத்தில் ஆர்ப்பிட்டர்(சுற்றுகலம்), லேண்டர் (தரையிறங்கி), ரோவர்(தரைசுற்றி வாகனம்) ஆகிய மூன்று பகுதிகள் உள்ளன. இந்த ஒருங்கிணைந்த பகுதி 1.3 டன் எடை கொண்டதாகும். விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் நினைவாக லேண்டருக்கு விக்ரம் என்றும், ரோவருக்கு பிரக்யான் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இஸ்ரோ இதுவரை செலுத்தியிராத விண்வெளிப் பயணம் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் இந்த சவாலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. திட்டமிட்டபடி அனைத்தும் நடந்தால் செப். 6 அல்லது 7-ஆம் தேதி நிலவில் கால் பதிக்கும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.