திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

பில்லி சூனியத்துக்கு பயந்து கர்நாடக பேரவைக்குள் எலுமிச்சைக்குத் தடா! என்னக் கொடுமை?

கர்நாடக சட்டப்பேரவையான விதான் சௌதாவுக்குள் நுழைவோரை பரிசோதிக்கும் பாதுகாவலர்கள் தற்போது கண்கொத்திப் பாம்பாக பணியாற்றி வருகிறார்கள்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:26 am

ENS


கர்நாடக சட்டப்பேரவையான விதான சௌதாவுக்குள் நுழைவோரை பரிசோதிக்கும் பாதுகாவலர்கள் தற்போது கண்கொத்திப் பாம்பாக பணியாற்றி வருகிறார்கள்.

காரணம், பார்வையாளர்கள் யாரும் எலுமிச்சைப் பழத்தையோ அல்லது சின்னதாக, உருண்டையாக, மஞ்சள் நிறத்தில் இருக்கும் எதையோ பேரவை வளாகத்துக்குள் கொண்டு சென்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான்.

எலுமிச்சைப் போன்ற எந்த ஒரு பொருளையும் வளாகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என்று பாதுகாவலர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மந்திரம் அல்லது தந்திரம் செய்வோரின் மிக முக்கிய ஆயுதம் எலுமிச்சைப் பழம் என்பதால் அதனை சட்டப்பேரவை வளாகத்துக்குள் கொண்டு வர வேண்டாம் என்பதுதான் ஆட்சியாளர்களின் எண்ணம்.

கர்நாடகாவில் ஆளும் கூட்டணி அரசுக்கு எதிராக எத்தனையோ விரும்பத்தகாத விஷயங்கள் நடந்து வரும் நிலையில், எந்த ஒரு சின்ன விஷயத்தையும் அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாதநிலையில் உள்ளது அரசு.

எலுமிச்சைப் பழத்தை உள்ளேக் கொண்டு வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளோம். சமீபத்தில் எலுமிச்சை, பச்சை மிளகாய் போன்றவை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள சில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் அறைக் கதவுகளுக்கு அருகே யாரோ போட்டுவைத்திருந்தார்கைள். இதனால் ஆளுங்கட்சியினர் கவலை அடைந்தனர். 

இதனால்தான் சட்டப்பேரவை வளாகத்துக்குள் எலுமிச்சையைக் கொண்ட வர தடை விதிக்கப்பட்டது. அதே சமயம், பாதுகாவலர்கள் நடத்தும் சோதனையில் ஒரு நாளைக்கு 20 முதல் 25 எலுமிச்சைகளை பார்வையாளர்களிடம் இருந்து பிடுங்கி வைக்கிறார்கள். 

ஆனால் இதில் சில விதிவிலக்குகளும் இருக்கின்றன. பொதுப்பணித் துறை அமைச்சர் எச்.டி. ராவண்ணா, முதல்வரின் மூத்த சகோதரர் ஆகியோர் தங்களுடன் எலுமிச்சையைக் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்கிறார்கள் பாதுகாவலர்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.