/

மும்பையில் பெய்யும் பேய்மழை: 72 மணி நேரத்தில் 4வது விபத்து; 6 தொழிலாளர்கள் பலி

மும்பையில் பெய்து வரும் கன மழை காரணமாக புனேவில் சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்ததில் 6 தொழிலாளர்கள் பலியாகினர். 3 பேர் காயமடைந்தனர்.

News image
Updated On :2 ஜூலை 2019, 7:44 am


புனே: மும்பையில் பெய்து வரும் கன மழை காரணமாக புனேவில் சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்ததில் 6 தொழிலாளர்கள் பலியாகினர். 3 பேர் காயமடைந்தனர்.

கடந்த 24 மணி நேரமாக மும்பையில் பெய்து வரும் கன மழை காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

இன்று அதிகாலை 1.15 மணிக்கு சின்ஹபத் கல்லூரி வளாகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் பலியாகினர். 3 பேர் காயமடைந்தனர்.

2 நாட்களுக்கு முன்பு கொந்தவா சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் புனேவில் 15 பேர் பலியான சம்பவத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சி நீங்குவதற்குள் அடுத்த சம்பவம் நடந்தேறியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 72 மணி நேரத்தில் வெவ்வேறு இடங்களில் 4 சம்பவங்கள் நடந்துள்ளன. கன மழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கையாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.