காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

மும்பையில் பெய்யும் பேய்மழை: 72 மணி நேரத்தில் 4வது விபத்து; 6 தொழிலாளர்கள் பலி

மும்பையில் பெய்து வரும் கன மழை காரணமாக புனேவில் சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்ததில் 6 தொழிலாளர்கள் பலியாகினர். 3 பேர் காயமடைந்தனர்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:24 am

ANI


புனே: மும்பையில் பெய்து வரும் கன மழை காரணமாக புனேவில் சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்ததில் 6 தொழிலாளர்கள் பலியாகினர். 3 பேர் காயமடைந்தனர்.

கடந்த 24 மணி நேரமாக மும்பையில் பெய்து வரும் கன மழை காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

இன்று அதிகாலை 1.15 மணிக்கு சின்ஹபத் கல்லூரி வளாகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் பலியாகினர். 3 பேர் காயமடைந்தனர்.

2 நாட்களுக்கு முன்பு கொந்தவா சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் புனேவில் 15 பேர் பலியான சம்பவத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சி நீங்குவதற்குள் அடுத்த சம்பவம் நடந்தேறியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 72 மணி நேரத்தில் வெவ்வேறு இடங்களில் 4 சம்பவங்கள் நடந்துள்ளன. கன மழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கையாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.