2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

2ஜி ஊழல் கும்பலில் புதிதாக ஒரு ஜி இணைந்துள்ளது: அமித்ஷா சொல்வது இவரைத்தான்

2ஜி ஊழல் கும்பலுடன் புதிதாக ஒரு ஜி இணைந்துள்ளது என்று பாஜக தேசியச் செயலர் அமித் ஷா சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:00 am

ENS


கொல்கத்தா: 2ஜி ஊழல் கும்பலுடன் புதிதாக ஒரு ஜி இணைந்துள்ளது என்று பாஜக தேசியச் செயலர் அமித் ஷா சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பாஜக தேசியச் செயலர் அமித் ஷா, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரூ.12 லட்சம் கோடி மதிப்பிலான 2ஜி ஊழல் நடந்திருப்பதற்கு நாமே சாட்சி. தற்போது இந்த 2ஜி ஊழல் கும்பலுடன் மேலும் ஒரு ஜி இணைந்துள்ளது. அவர் பெயர் பிரியங்கா காந்தி. இனி நீங்களே கற்பனை செய்து பாருங்கள். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எந்த அளவுக்கு ஊழல் செய்வார்கள் என்று?

ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகளை வர்ணித்த அமித் ஷா, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் குடும்ப அரசியலையே நடத்துகிறது. மம்தா பானர்ஜியின் உறவினர், அடுத்து கட்சியின் தலைமையை ஏற்கத் தயாராக உள்ளார் என்று கூறினார்.

மேலும், நாட்டு மக்கள் அனைவரும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் நரேந்திர மோடியை பிரதமராக வர வேண்டும் என்பதற்காக வாக்களிக்கும் அதே நேரத்தில், மேற்கு வங்க மக்கள் அனைவரும், தங்களுக்கு அந்த பொன்னான நாட்கள் மீண்டும் வர வாக்களிப்பார்கள்.

மேற்கு வங்கத்தில் மீண்டும் மாற்றம் வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். ரத யாத்திரையை தடை செய்வதன் மூலமோ, பாஜக தொண்டர்களைக் கொல்வதன் மூலமோ, எனது ஹெலிகாப்டரை தரையிறங்க விடாமல் தடுப்பதன் மூலமோ, மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுத்துவிட முடியாது. இது எல்லாவற்றுக்கும் மக்கள் தேர்தலில் பதில் சொல்வார்கள் என்று அமித் ஷா கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.