2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மதுரை பாணியில் போஸ்டர் போட்டு மிரட்டும் காங்கிரஸார்: என்ன செய்யப் போகிறார் பிரியங்கா?

உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதி காங்கிரஸ் கட்சி பொதுச் செயலராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தீவிர அரசியலில் ஈடுபடாமல் முக்கியக் கட்சிப் பதவி கிடைத்துள்ளது பிரியங்காவுக்கு.

News image
Updated On :31 ஜனவரி 2024, 6:58 am

ENS

லக்னௌ: உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதி காங்கிரஸ் கட்சி பொதுச் செயலராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தீவிர அரசியலில் ஈடுபடாமல் முக்கியக் கட்சிப் பதவி கிடைத்துள்ளது பிரியங்காவுக்கு.

இந்த நிலையில், அவரை வாழ்த்தி உத்தரப்பிரதேச காங்கிரஸ் தொண்டர்கள் போஸ்டர் போட்டு சூட்டைக் கிளப்பி வருகிறார்கள்.

வாராணசி பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் ஒட்டியிருக்கும் போஸ்டரில், வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை பிரியங்கா காந்தி எதிர்கொள்ள வேண்டும் என்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதாவது காசி நகரின் மக்கள் பிரதிநிதியாக பிரியங்கா காந்தி வர வேண்டும் என்று ஹிந்தியில் அச்சிடப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல, இது பற்றி காங்கிரஸ் தொண்டர்கள் சொல்வதைக் கேட்டால் ஆடிப்போய்விடுவோம். வாராணசி எம்.பி.யாக பிரியங்கா வர வேண்டும். இங்கே போட்டியிட்டு அவர் வெற்றி பெறுவார் என்பதை எங்களால் உறுதியாகக் கூற முடியும். அதை செய்து காட்டுவோம். இதன் மூலம் பிரதமர் மோடிக்கு பாடம் புகட்ட வேண்டும். இனி அவர் எப்போதுமே வாராணசி பக்கமே வரக் கூடாது என்கிறார்கள்.

ஆனால் இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சியினர் இருவேறு கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள். அதாவது ஒன்று பிரியங்கா காந்தி சோனியாவின் ரே பரேலி தொகுதியிலோ அல்லது ராகுலின் அமேதி தொகுதியிலேயோ தான் போட்டியிட வேண்டும். ராகுல் வேண்டுமானால் வேறு தொகுதியில் போட்டியிடலாம் என்கிறார்கள்.

முதன் முதலில் அரசியலில் குதித்திருக்கும் பிரியங்காவுக்கு பாதுகாப்பான தொகுதியையே ஒதுக்க வேண்டும் என்பது இவர்களது கருத்து. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.