மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

பாஜகவின் அடுத்த ஏமாற்று வித்தை என ப. சிதம்பரம் சொல்லுவது இதைத்தானா?

ரயில்வே துறையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு, பாஜக அரசின் அடுத்த ஏமாற்று வித்தை என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

News image
Updated On :24 ஜனவரி 2019, 9:38 am


புது தில்லி: ரயில்வே துறையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு, பாஜக அரசின் அடுத்த ஏமாற்று வித்தை என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் சிதம்பரம் கூறியிருப்பதாவது, கடந்த 5 ஆண்டுகளாக ரயில்வேயில் 2,82,976 பணியிடங்களை காலியாகவே வைத்திருந்தமத்திய அரசு, திடீரென விழித்துக் கொண்டு, அனைத்து காலிப் பணியிடங்களையும் அடுத்த 3 மாதங்களில் நிரப்ப உள்ளதாகக் கூறுகிறது.

ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் நேற்று பேசுகையில், ரயில்வே துறை அடுத்த 6 மாதத்துக்குள் 1.31 லட்சம் ஊழியர்களை நியமிக்கப் போவதாகவும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை அடுத்த 2 ஆண்டுக்குள் உருவாக்கப் போவதாகவும் அறிவித்தார்.

அதாவது, இந்திய ரயில்வேயில் பணியாற்ற ஒப்புதல் பெற்றிருக்கும் மொத்த எண்ணிக்கை 15,06,598 ஊழியர்கள். இதில் தற்போது 12,23,622 பேர்தான் பணியில் உள்ளார்கள். மீதம் 2,82,972 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 1,51,548 பணியிடங்களை நிரப்பும் பணி நடந்து வருகிறது. விரைவில் 1,31,428 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கோயல் தெரிவித்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.