/

மாயாவதி பிறந்தநாள் விழாவில் களேபரம்: பிரித்துக்கொடுப்பதற்கு முன்பு பிரித்து மேயப்பட்ட கேக்- வைரலாகும் விடியோ

அந்த மிகப்பெரிய கேக்கை பிரித்துக் கொடுப்பதற்கு முன்பே சூறையாடப்பட்ட சம்பவத்தின் விடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

News image
Updated On :15 ஜனவரி 2019, 1:10 pm

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது 63-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து உத்தரப் பிரதேசம் முழுவதும் வருங்கால இந்திய பிரதமர் மாயாவதி எனும் வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹாவில் மாயாவதி பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக மிகப்பெரிய கேக் தயாராக இருந்தது. அப்போது ஏற்பட்ட களேபரங்களில் அங்கு கூடியிருந்தவர்கள் தங்கள் கைகளுக்கு கிடைத்த வரையில், அந்த கேக்கை திருடிச் சென்றனர். 

முறையாக பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு அங்கு கூடியிருப்பவர்களுக்காகவே தயாரிக்கப்பட்டிருந்த அந்த மிகப்பெரிய கேக்கை பிரித்துக் கொடுப்பதற்கு முன்பே சூறையாடப்பட்ட சம்பவத்தின் விடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

முன்னதாக, அவருடைய 60-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போதும் இதேபோன்று சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.