மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை.. மோடி பெருமிதம் கொள்ளும் புதிய விஷயம்

இந்திய வரலாற்றில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லாத மத்திய அரசு இது வென்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

News image
Updated On :12 ஜனவரி 2019, 9:51 am


புது தில்லி: இந்திய வரலாற்றில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லாத மத்திய அரசு இது வென்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

புது தில்லியில் இன்று நடைபெற்ற பாஜக கூட்டத்தில் தலைமை தாங்கிப் பேசிய பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் அவர் பேசுகையில், பாஜக அரசின் மூலம், ஊழல் இல்லாமல் நாட்டை வழிநடத்த முடியும் என்பதையும், அதன் மூலம் நாடு மாற்றத்தைக் காணும் என்பதையும் நிரூபித்துள்ளோம்.

ஏழ்மை நிலை காரணமாக தங்களது வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் காண முடியாத இளைஞர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு என்பது அவசியம்.

முந்தைய ஆட்சியாளர்கள் விவசாயிகளை வெறும் வாக்காளர்களாகவே பார்த்தனர். ஆனால் பாஜக ஆட்சியில், அவர்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண முயன்று வருகிறது. 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் ஊதியம் இரண்டு மடங்காக உயர வேண்டும் என்பதற்காக நாங்கள் இரவும் பகலும் உழைக்கிறோம்.

அயோத்தி விவகாரத்தில் சுமூகமான முடிவு எட்டப்படுவதை காங்கிரஸ் விரும்பவில்லை. தொடர்ந்து வழக்குரைஞர்கள் மூலம் தடையை ஏற்படுத்தி வருகிறது.

நாடுதான் இனி முடிவு செய்ய வேண்டும், தங்களுக்கு பிரதானமாக உழைக்கப் போவது யார், மாதக்கணக்கில் விடுமுறை எடுத்துவிட்டு வெளிநாட்டுக்குச் சென்றவரா அல்லது ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் கடுமையாக ஓய்வின்றி உழைப்பவரா? என்று மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.