மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ஆளில்லா 2 விண்கலங்களை அனுப்ப திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

2020ம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2021ம் ஆண்டு ஜூலையிலும் இரண்டு ஆளில்லா விண்கலங்களை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டிருப்பதாக அதன் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :11 ஜனவரி 2019, 10:50 am


பெங்களூரு: 2020ம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2021ம் ஆண்டு ஜூலையிலும் இரண்டு ஆளில்லா விண்கலங்களை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டிருப்பதாக அதன் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், 2019ம் ஆண்டு இஸ்ரோவில் 17 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அதில் 2 ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை விண்ணுக்கு அனுப்பும் திட்டமும் அடங்கும்.

2020ம் ஆண்டு டிசம்பரில் ஒரு விண்கலமும், 2021 ஜூலையில் 2வது விண்கலமும் விண்ணுக்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் விண்வெளி வீரர்களுடன், விண்கலத்தை அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இது இஸ்ரோவின் மிகப் பெரிய திருப்பு முனை திட்டமாகும். ககன்யான் திட்டத்தின் ஆரம்பக் கட்ட பயிற்சி இந்தியாவிலும், உயர்மட்ட பயிற்சிகள் ரஷ்யாவிலும் அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் பெண் விண்வெளி ஆய்வாளர்களும் இடம்பெறுவார்கள் என்று தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.