/

காவல் நிலையத்தின் உள்ளே இளைஞரை கண்மூடித்தனமாகத் தாக்கிய மாவட்ட நீதிபதி (வைரல் விடியோ) 

தனது மனைவிக்கு ஆபாச செய்தி அனுப்பியதற்காக காவல் நிலையத்தின் உள்ளே இளைஞரை மாவட்ட நீதிபதி  ஒருவர் கண்மூடித்தனமாகத் தாக்கிய சம்பவம் நிக்லாந்துள்ளது.

News image
Updated On :8 ஜனவரி 2019, 10:05 am

அலிபுர்துவார்: தனது மனைவிக்கு ஆபாச செய்தி அனுப்பியதற்காக காவல் நிலையத்தின் உள்ளே இளைஞரை மாவட்ட நீதிபதி  ஒருவர் கண்மூடித்தனமாகத் தாக்கிய சம்பவம் நிக்லாந்துள்ளது. 

மேற்கு வங்க மாநிலம் அலிபுர்துவார் மாவட்ட நீதிபதியாக இருப்பவர் நிகில் நிர்மல். இவரது மனைவி  நந்தினி கிருஷ்ணன். இவருக்கு பினோத் சர்கார் என்னும் இளைஞர் பிரபல சமூக வலைத்தளமொன்றில் தொடர்ந்து  ஆபாச  செய்திகள் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

எனவே அவர்  மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பலகட்டா காவல் நிலையத்தில் நந்தினி புகார் கொடுத்தார். அவரது புகாரின் பேரில் பினோத் சர்கார் ஞாயிறன்று கைது செய்யயப்பட்டார். காவல் நிலையத்தில் அவர் வைக்கப்பட்டிருந்த போது அங்கு வந்த நிகில் நிர்மல் மற்றும் நந்தினி இருவரும் சர்காரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். அத்துடன் அவரை கொலை செய்து விடுவதாகவும் நிர்மல் மிரட்டியுள்ளார். இந்தக் காட்சியானது கேமராவில் பதிவு செய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சர்கார் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். அதே நேரம் புகார்களின் காரணமாக நிகில் நிர்மல் தற்போது விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர். 

(thanks: NDTV)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.