குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்று சொல்பவர்கள் மீது வெடிகுண்டு வீச வேண்டும்: பாஜக எம்.எல் ஏ சர்ச்சை பேச்சு 

இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்று சொல்பவர்கள் மீது வெடிகுண்டு வீச வேண்டும் என்று உத்தரப்பிரதேச மாநில பாஜக எம்.எல் ஏ ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 6:47 am

ANI

முஸாபர் நகர்:    இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்று சொல்பவர்கள் மீது வெடிகுண்டு வீச வேண்டும் என்று உத்தரப்பிரதேச மாநில பாஜக எம்.எல் ஏ ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் முஸாபர் நகர் தொகுதி பாரதிய ஜனதா கட்சி எம்.எல் ஏவாக இருப்பவர் விக்ரம் சைனி. அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி கண்டனத்திற்கு ஆளாகுபவர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மாநில அரசின் சார்பில் நடைபெற்ற குடும்பக் கட்டுப்பாட்டு முகாம் ஒன்றில் பேசிய அவர், 'குடும்பக் கட்டுப்பாடு தொடர்பாக தனியாக சட்டம் கொண்டு வரப்படும் வரை, ஹிந்து மக்கள் அதிக அளவில் குழநதைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்' என்று இவர் பேசியது சர்சையைக் கிளப்பியது. 

இந்நிலையில் இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்று சொல்பவர்கள் மீது வெடிகுண்டு வீச வேண்டும் என்று விக்ரம் சைனி பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

முஸாபர் நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்று கூறுபவர்கள் அனைவரும் துரோகிகள். அவர்கள் சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்றும், தாங்கள் மிரட்டப்படுகிறோம் என்று கூறுபவர்கள் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்ட வேண்டும்.  

இந்திய நாட்டின் மதிப்பீடுகளை அவர்கள் மதிக்கவில்லை என்றால், அவர்கள் தாராளமாக இந்நாட்டை விட்டு வெளிஏறி, வேறு ஏதாவது நாட்டில் குடியேறலாம். 

இத்தகைய 'பாதுகாப்பற்ற' மக்கள் மீது குண்டுவீசி தாக்குவதற்கு என்று அரசு எனக்கு தனியாக ஒரு அமைச்சரவையை ஒதுக்க வேண்டும். 

அவர்கள் யாரும் என்னிடம் இருந்து தப்பிக்க முடியாது. 

இவ்வாறு அவர் பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.