ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

மோடி பங்கேற்கும் கூட்டத்தில் கருப்பு ஆடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் 

ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் கருப்பு ஆடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். 

News image
Updated On :3 ஜனவரி 2019, 9:34 am

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் கருப்பு ஆடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். 

ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் வரும் 5-ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்பங்கேற்பவர்கள் கருப்பு நிற ஆடைகள், ஸ்வெட்டர்கள், பிளேசர்கள், கைப்பைகள், ஷூக்கள் மற்றும் காலுறைகள் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் துணை நிலை ஆசிரியர்கள் கூட்டம் நடைபெறும் அரங்கில் அரங்கில் நுழைந்து, பிரதமருக்கு கருப்புக கொடி காட்டுவதை தடுக்கவே, இத்தகைய உத்தரவை பலமு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிறப்பித்ததாகக் கூறப்பட்டது. 

முன்னதாக கடந்த வருடம் நவம்பர் 15-ஆம் தேதி இதேபோல் ஒரு கூட்டம் ராஞ்சியில் நடந்த போது, அப்போது கூட்ட அரங்கில் நுழைந்த துணை நிலை ஆசிரியர்கள் பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டிய சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.   

இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் கருப்பு ஆடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். 

புதன்கிழமை இரவு நடைபெற துணை நிலை ஆசிரியர்கள் சங்க மாநில குழு கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்ட அரங்கில் போராட்டம் செய்வதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் இந்திரஜித் மஹ்தா தெரிவித்துள்ளார்.    

அதேநேரம் டிரான்சிஸ்டர், கேமரா, பைனாகுலர், தீப்பெட்டி மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை எடுத்துச் செல்வதற்கான தடை நீடிக்கிறது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.