டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

இரண்டு நாட்களில் 50 லட்சம் லிட்டர் மது விற்பனை: உற்சாக உ.பி! 

உத்தர பிரதேச மாநிலத்தில் ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடும் விதமாக டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரு தினங்களில் மட்டும், 50 லட்சம் லிட்டர் மது விற்பனை செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.   

News image
Updated On :2 ஜனவரி 2019, 10:32 am

லக்னௌ: உத்தர பிரதேச மாநிலத்தில் ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடும் விதமாக டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரு தினங்களில் மட்டும், 50 லட்சம் லிட்டர் மது விற்பனை செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.   

இதுதொடர்பாக மாநில கலால் துறை ஆவணங்களை மேற்கோள் காட்டி துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாவது:

டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரு தினங்களில் மது விற்பனை தொடர்பான தகவல்கள் கலால் துறை மூலமாக பதிவு செய்யப்பட்டன. 

அதில் டிசம்பர் 31 அன்று மட்டும் மது விற்பனை இரு மடங்காக நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால் இந்த விற்பனை விபரத்தில் வீட்டில் மது வைத்திருந்து குடிப்பவர்கள் மற்றும் விடுதிகளில் விற்பனையானதை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. 

அதன்படி டிசம்பர் 31 அன்று 31 லட்சம் லிட்டர் நாட்டு வகை மது விற்பனை ஆகியுள்ளது. 

அதேபோல இந்தியாவில் தயாரிக்கப்படும் அந்நிய நாட்டு மது வகைகள் 18 லட்சம் லிட்டர் அளவுக்கு விற்பனையாகியுள்ளது.

அதுபோல இந்த இரு நாட்களில் 23 லட்சம் பீர் பாட்டில்கள் விற்பனையாகியுள்ளது. 

இதன் மூலம் வருடா வருடம் பீர் விற்பனை அதிகரித்து வருகிறது என்பது உறுதியாகிறது. 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.    
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.