எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் மாயம்: வெளியுறவுத் துறை உறுதி

இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் பிடிபட்டிருப்பதாக பாகிஸ்தான் கூறியிருப்பது குறித்து விசாரித்து வருவதாக

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:15 am

ANI


புது தில்லி: இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் பிடிபட்டிருப்பதாக பாகிஸ்தான் கூறியிருப்பது குறித்து விசாரித்து வருவதாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில் புது தில்லியில் இன்று இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

தனது பேச்சைத் துவக்கும் முன்பே, இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்கள் கேள்வி எழுப்புவதைத் தவிர்க்குமாறு கூறிவிட்டு, தனது பேச்சைத் தொடங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது, பாகிஸ்தான் எல்லையில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக இன்று காலை  இந்திய எல்லைக்குள் நுழைந்து பாகிஸ்தான் விமானங்கள் தாக்குதல் நடத்தின. அவற்றை இந்திய விமானப் படை விமானங்கள் எதிர்கொண்டன. அப்போது இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தானின் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியது.

இந்த சண்டையில் இந்திய விமானப் படையின் மிக் 21 ரக விமானம் ஒன்றை துரதிருஷ்டவசமாக இழந்துள்ளோம். இந்த சம்பவத்தில் விமானியும் காணாமல் போயுள்ளார். கைது செய்யப்பட்ட இந்திய விமானி தங்கள் வசம் இருப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப் படை விமானம் மிக் - 21 பிஸோன் ஜெட் விமானத்தில் சென்ற விங் கமாண்டர் அபிநந்தன், இதுவரை திரும்பவில்லை என்று ஏஎன்ஐ சற்று நேரத்துக்கு முன்பு செய்தி வெளியிட்டிருந்தது.

முன்னதாகவே, இந்திய விமானப் படை விமானம் ஒன்றை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும், அதில் இருந்த கமாண்டோ அபிநந்தன் என்ற விமானியை பிடித்து வைத்திருப்பதாகவும் பாகிஸ்தான் அறிவித்து, சில விடியோக்களையும் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.