கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

பாகிஸ்தான் ராணுவ அதிகாரியின் பேட்டியை ஒளிபரப்பிய சேனல்களுக்கு நோட்டீஸ் 

புல்வாமா தாக்குதலையடுத்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவரின் பேட்டியை ஒளிபரப்பிய இரண்டு தொலைக்காட்சி சேனல்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

News image
Updated On :26 பிப்ரவரி 2019, 11:27 am

புது தில்லி: புல்வாமா தாக்குதலையடுத்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவரின் பேட்டியை ஒளிபரப்பிய இரண்டு தொலைக்காட்சி சேனல்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதியன்று சி.ஆர்.பி.எப் வீரர்களின் வாகனங்களின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 40 வீரர்கள் மரணமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவமானது இந்திய மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த கொடூர தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு திட்டமிட்டு நடத்தியது தெரிய வந்தது. தற்போது தேசிய விசாரணை ஆணையம் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் புல்வாமா தாக்குதலையடுத்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவரின் பேட்டியை ஒளிபரப்பிய இரண்டு தொலைக்காட்சி சேனல்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 22-ஆம் தேதியன்று பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியை இந்தியாவில் சில செய்தி சேனல்கள் ஒளிபரப்பு செய்தன.

இதையடுத்து 13 செய்தி சேனல்களுக்கு  மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன. ஆனால் தற்போது இரண்டு சேனல்களுக்கு மட்டுமே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த நோட்டீஸில் சேனல்களுக்கு என வரையறைக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறும் வகையில் எந்த ஒரு நிகழ்ச்சியையும் ஒளிபரப்பு செய்வதோ அல்லது மறு ஒளிபரப்பு செய்வதோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.