கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

தலித் என்பதால் எனக்கு மூன்று முறை முதல்வர் பதவி மறுக்கப்பட்டது: கர்நாடக துணை முதல்வர்

தலித் என்பதால் எனக்கு மூன்று முறை முதல்வர் பதவி மறுக்கப்பட்டது என்று கர்நாடக துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். 

News image
Updated On :25 பிப்ரவரி 2019, 11:05 am


தலித் என்பதால் எனக்கு மூன்று முறை முதல்வர் பதவி மறுக்கப்பட்டது என்று கர்நாடக துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். 

கர்நாடகாவில் உள்ள தாவண்கரே மாவட்டத்தில் சாலவாடி பட்டியலின சமூகத்தினர் கூட்டத்தில் அம்மாநில துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், 

"தலித் தலைவர்களுக்கு முதல்வர் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. மறைந்த காங்கிரஸ் தலைவர் பசவலிங்கப்பா, கர்நாடக மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் கேஹெச் ரங்காநாத் மற்றும் மல்லிகார்ஜூன் கார்கே ஆகியோர் முதல்வர்களாகியிருக்க வேண்டும். நான் தலித் என்பதால் எனக்கு மூன்று முறை முதல்வர் பதவி மறுக்கப்பட்டது. ஆனால், மனமில்லாமல் ஒருவழியாக துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. 

அரசு அளவிலும் தலித்துகள் மீது பாகுபாடுகள் பார்க்கப்படுகிறது. இடஒதுக்கீடு வசதி இருந்தாலும், பதவி உயர்வில் அநீதி இழைக்கப்படுகிறது. பதவியிறக்கம் செய்யப்பட்ட 7 அரசு அதிகாரிகள் தற்கொலை செய்துள்ளனர். பதவி உயர்விலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த எங்களது அரசு அடுத்த வாரம் புதிய விதிகளை கொண்டு வரும்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.