2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தலித் என்பதால் எனக்கு மூன்று முறை முதல்வர் பதவி மறுக்கப்பட்டது: கர்நாடக துணை முதல்வர்

தலித் என்பதால் எனக்கு மூன்று முறை முதல்வர் பதவி மறுக்கப்பட்டது என்று கர்நாடக துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:14 am

ENS


தலித் என்பதால் எனக்கு மூன்று முறை முதல்வர் பதவி மறுக்கப்பட்டது என்று கர்நாடக துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். 

கர்நாடகாவில் உள்ள தாவண்கரே மாவட்டத்தில் சாலவாடி பட்டியலின சமூகத்தினர் கூட்டத்தில் அம்மாநில துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், 

"தலித் தலைவர்களுக்கு முதல்வர் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. மறைந்த காங்கிரஸ் தலைவர் பசவலிங்கப்பா, கர்நாடக மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் கேஹெச் ரங்காநாத் மற்றும் மல்லிகார்ஜூன் கார்கே ஆகியோர் முதல்வர்களாகியிருக்க வேண்டும். நான் தலித் என்பதால் எனக்கு மூன்று முறை முதல்வர் பதவி மறுக்கப்பட்டது. ஆனால், மனமில்லாமல் ஒருவழியாக துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. 

அரசு அளவிலும் தலித்துகள் மீது பாகுபாடுகள் பார்க்கப்படுகிறது. இடஒதுக்கீடு வசதி இருந்தாலும், பதவி உயர்வில் அநீதி இழைக்கப்படுகிறது. பதவியிறக்கம் செய்யப்பட்ட 7 அரசு அதிகாரிகள் தற்கொலை செய்துள்ளனர். பதவி உயர்விலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த எங்களது அரசு அடுத்த வாரம் புதிய விதிகளை கொண்டு வரும்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.