2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விமானத்தைக் கடத்துவதாக ஏர் இந்தியாவுக்கு மிரட்டல்; விமான நிலையங்களில் உஷார் நிலை

மும்பையில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்துக்கு, விமானத்தைக் கடத்தப் போவதாக மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததை அடுத்து, அனைத்து விமான நிலையங்களும் உச்ச கட்ட பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:13 am

ENS


புது தில்லி: மும்பையில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்துக்கு, விமானத்தைக் கடத்தப் போவதாக மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததை அடுத்து, அனைத்து விமான நிலையங்களும் உச்ச கட்ட பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள துணை ராணுவப் படையினர், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுமாறு விமானப் போக்குவரத்துக்கான பாதுகாப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

மும்பை விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிக்கு இன்று தொலைபேசி வாயிலாகக் கிடைத்த தகவலில், இந்திய ஏர்லைன்ஸ் விமானம் பாகிஸ்தானுக்கு கடத்தப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மிரட்டலை அடுத்து, இந்தியாவில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் முக்கியமான 8 பாதுகாப்பு விஷயங்களை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டன.

அதாவது, விமான நிலையங்களுக்குள் பார்வையாளர்களை அனுமதிப்பதில் கட்டுப்பாடு, வாகனங்களை தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிப்பது, முக்கிய நுழைவு வாயிலிலேயே அனைத்து பயணிகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவது உட்பட முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.