2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பகுஜன் சமாஜ், சமாஜவாதி தொகுதிப் பங்கீடு: அகிலேஷ், மாயாவதி அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பகுஜன் சமாஜ் 38 தொகுதிகளிலும், சமாஜவாதி 37 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக இறுதி அறிவிப்பை இன்று வெளியிட்டனர். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:12 am

ENS


மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பகுஜன் சமாஜ் 38 தொகுதிகளிலும், சமாஜவாதி 37 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக இறுதி அறிவிப்பை இன்று வெளியிட்டனர். 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளது. பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வலுவான கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி மற்றும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிகள் காங்கிரஸை தவிர்த்து கூட்டணி அமைக்கப்போவதாக கடந்த மாதம் அறிவித்தனர். அப்போது மொத்தமுள்ள 80 தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவித்தனர். மேலும், ரேபரலி மற்றும் அமேதி தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அறிவித்தனர். 

இந்நிலையில், தொகுதிப் பங்கீட்டின் இறுதி அறிவிப்பை மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் இன்று வெளியிட்டனர். அதில், சமாஜவாதி 37 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 38 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக அறிவித்தனர். 

மீதமுள்ள 5 தொகுதிகளில், அமேதி மற்றும் ரேபரலி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்காக தவிர்த்துள்ளனர். அமேதி மற்றும் ரேபரலி தொகுதிகள் முறையே ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியின் தொகுதிகளாகும். 

மற்ற 3 தொகுதிகள் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சிக்கு பாக்பத், முசாஃபர்நகர் மற்றும் மதுரா ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் சமாஜவாதி போட்டியிடும் தொகுதி எண்ணிக்கை 38 இல் இருந்து 37 ஆக குறைந்தது. 

மேலும், தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தின்படி விவிஐபி தொகுதிகளான வாரணசி (பிரதமர் மோடி தொகுதி), லக்னௌ (மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொகுதி), கோரக்பூர் (உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பலம் மிகுந்த தொகுதி) ஆகிய தொகுதிகள் சமாஜவாதி கட்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.