2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

வாழ்க்கையைத் தொடங்குவதற்குள் முடிந்து போனதே: கணவரைக் கொன்றதால் என்ன கிடைத்தது? இளம் மனைவியின் கதறல்

கடுமையான நடவடிக்கை எடுத்து, பயங்கரவாதிகளைத் தண்டித்து, தனது கணவரின் ஆத்மா சாந்தியடைய மத்திய அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்று புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த எச். குருவின் மனைவி கலாவதி (22) கூறியுள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:09 am

ENS


மாண்டியா: கடுமையான நடவடிக்கை எடுத்து, பயங்கரவாதிகளைத் தண்டித்து, தனது கணவரின் ஆத்மா சாந்தியடைய மத்திய அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்று புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த எச். குருவின் மனைவி கலாவதி (22) கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த குரு, புல்வாமாவில் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்களில் ஒருவர்.

Story image

சம்பவம் குறித்து செய்தி அறிந்ததும், மாவட்ட அதிகாரிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் குருவின் வீட்டுக்கு வந்து குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய வண்ணம் உள்ளனர்.

வருவோர் அனைவரிடமும் கலாவதி கேட்கும் ஒரே கேள்வி இதுதான், நாட்டுக்காக சேவையாற்றும் எனது கணவரைக் கொன்றிருப்பதன் மூலம் பயங்கரவாதிகளுக்கு கிடைத்தது என்ன? என்பதே. இந்த சம்பவத்துக்குக் காரணமான பயங்கரவாதிகளை கடுமையாக தண்டிப்பதன் மூலம், அவரது ஆத்மா சாந்தியடையும்  என்று கூறி கதறி அழுகிறார்.

Story image

குரு - கலாவதிக்கு 7 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. புது வாழ்க்கையை பல கனவுகளோடு தொடங்கிய தம்பதியின் வாழ்க்கை அதற்குள் முடிந்தே போய்விட்டது.

தனது கணவர் சென்ற வாகனம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்காகியது குறித்து செய்திகள் வந்ததும், அதனை நம்ப மறுத்த கலாவதி, தனது இஷ்ட தெய்வங்களுக்கு எல்லாம் விளக்கேற்றி தனது கணவர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.

ஆனால், வெள்ளிக்கிழமை வீர மரணம் அடைந்தவர்களின் பட்டியலை பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட போது, ஒட்டுமொத்தக் குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.