2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

புல்வாமாவில் நடந்தது திட்டமிட்டு நடந்த முதல் தற்கொலைப் படைத் தாக்குதல்: விசாரணையில் தகவல்

புல்வாமா தாக்குதல் குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவப் பகுதியில் இருந்த மாதிரிகள் திரட்டப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:09 am

ENS


புது தில்லி: புல்வாமா தாக்குதல் குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவப் பகுதியில் இருந்த மாதிரிகள் திரட்டப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

புல்வாமாவில் நடந்த தாக்குதல் குறித்து இதுவரை நடந்த விசாரணையில் கிடைத்திருக்கும் தகவல்கள்..

புல்வாமா தாக்குதல் மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலாகும்.

இது வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது. புல்வாமாவில் அவந்திபோரா அருகே பாதுகாப்புப் படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்துக்கு, இடது பக்கத்தில் இருந்து வந்த  தற்கொலைப் படை பயங்கரவாதி அடில் அகமது தார் ஓட்டி வந்த கார், 5வதாகச் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்திச் செல்ல முயல்வது போலச் சென்ற சில நொடிகளில் பயங்கரவாதி வெடிபொருளை வெடிக்கச் செய்தான். இதில் 49 பாதுகாப்புப் படையினர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த வாகனம் தனது பயணத்தைத் தொடங்கி 12 மணி நேரத்துக்குப் பிறகு தாக்குதலுக்கு இலக்கானது.  அதாவது சரியாக ஜம்முவில் காலை 3.30 மணிக்கு தனது பயணத்தைத் தொடங்கிய வாகனம், மாலை 3.30க்கு தாக்குதலுக்கு உள்ளானது.

விடுமுறைக்கு சொந்த ஊர் சென்ற பாதுகாப்புப் படை வீரர்கள், ஸ்ரீநகர் சென்று தாங்கள் பணியில் இணைந்ததை பதிவு செய்ய வேண்டும். அதற்காக ஏராளமான வீரர்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

அதாவது, பாதுகாப்புப் படை வாகனம் சென்று கொண்டிருந்த சாலைக்கு லிங்க்-சாலை வழியாக வந்த பயங்கரவாதி, பாதுகாப்புப் படை வாகனங்களுக்கு இடது பக்கத்திலேயே வந்து கொண்டிருந்தது. திடீரென ஒரு வாகனத்துக்கு அருகேச் சென்று வெடித்துச் சிதறியது.

இதில் பாதுகாப்புக் குறைபாடு இருந்ததா என்ற கேள்விக்கு, பொதுவாக பாதுகாப்பு வாகனங்களுக்கு எப்போதும் இரண்டு வழியில் அச்சுறுத்தல் வரும், அதாவது கண்ணிவெடித் தாக்குதல் அல்லது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு. இதுபோன்ற தாக்குதல்களைக் கையாள பாதுகாப்புப் படை வீரர்கள் தயாராகவே இருந்தனர். ஆனால், புல்வாமா தாக்குதல் முற்றிலும் எதிர்பாராத ஒரு தற்கொலைப் படைத் தாக்குதல். இதுவரை நடந்ததே இல்லை என்பது போன்ற திட்டமிட்ட தாக்குதல் இது என்பது முதற்கட்ட விசாரணையில் கிடைத்திருக்கும் சில தகவல்களாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.