2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பெங்களூருவில் இந்த நோய் அதிகம் பரவி வருகிறது: காரணம் டென்ஷன்தானாம்!

தகவல் தொழில்நுட்ப நகரம் என்று அழைக்கப்படும் பெங்களூருவில் 15 - 20 சதவீதம் பக்கவாத நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:05 am

ENS


பெங்களூரு: தகவல் தொழில்நுட்ப நகரம் என்று அழைக்கப்படும் பெங்களூருவில் 15 - 20 சதவீதம் பக்கவாத நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் அதிக அளவில் ஜங்க் உணவுகள் சாப்பிடுவது போன்றவை இந்த நோய்க்கான முக்கியக் காரணமாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அதில்லாமல் தகவல் தொழல்நுட்பத் துறையில் பணியாற்றும் இளைஞர்களுக்கும் பக்கவாதம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

ஒவ்வொரு மாதமும் 50 முதல் 60 நோயாளிகள் பக்கவாத நோய் பாதிப்புக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது  புள்ளி விவரம்.

தற்போது 45 வயது நபர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவது அதிகரித்துள்ளது என்று கூறும் விக்டோரியா மருத்துவமனை மருத்துவர் பிரவீன் குமார் கூறுகையில், மன அழுத்தம், டென்ஷன் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக இதயமும், மூளையும் பாதிப்படைகின்றன என்று தெரிவித்துள்ளார்.

இரவில் கண் விழித்து 12 - 14 மணி நேரம் பணியாற்றுவது, ஜங்க் உணவுகளை சாப்பிடுவது போன்றவற்றை செய்கிறார்கள். இவை ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட்டை பிடிப்பதற்கு சமம். எனவே, இதனை மாற்றி ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் பலனடையலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.