நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

விரைவில் தூங்கா மாநிலமாக மாறப் போகிறது குஜராத்: மாற்றி யோசிக்கும் மாநில அரசு!

குஜராத் மாநிலத்தில் கடைகள் மற்றும் உணவகங்கள் திறந்திருக்கும் நேரத்துக்கு இருக்கும் கட்டுப்பாட்டை நீக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

News image
Updated On :7 பிப்ரவரி 2019, 5:45 am


காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் கடைகள் மற்றும் உணவகங்கள் திறந்திருக்கும் நேரத்துக்கு இருக்கும் கட்டுப்பாட்டை நீக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

இதன் மூலம், குஜராத்தில் 24 மணி நேரமும் கடைகள், உணவகங்கள் திறந்திருக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று மாநில அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் நிதின் படேல், முதல்வர் விஜய் ரூபானி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் குஜராத் கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1948ல் மாற்றம் செய்யவும், இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இவற்றை திறந்து வைக்கும் வகையில் திருத்தம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே இந்த சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால், குஜராத்தில் உள்ள கடைகள், உணவகங்கள், நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இரவு நேரப் பணிகளுக்கு ஏராளமான இளைஞர்கள் பணியமர்த்தப்படுவதன் மூலம் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.

7 லட்சம் வணிக நிறுவனங்களில் சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். இனி இரவு நேரப் பணிக்கும் ஆட்கள் நியமிக்கப்பட்டால் வேலை வாய்ப்பு அதிகரிக்கப்படும். அதில்லாமல், கூடுதல் பணி நேரத்துக்கு தற்போது 1.5 மடங்கு ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையும் 2 மடங்காக உயர்த்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.