ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

காதலர் தினத்தை முன்னிட்டு.. தீவிர எதிர்ப்பு நடவடிக்கையில் குதிக்கிறது இளைஞர் அமைப்பு

பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு விஷ்வ ஹிந்து பரிஷத்தின் இளைஞர் அமைப்பான பஜ்ரங் தள் தீவிர எதிர்ப்பு நடவடிக்கையில் குதித்துள்ளது.

News image
Updated On :7 பிப்ரவரி 2019, 5:23 am


ஹைதராபாத்: பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு விஷ்வ ஹிந்து பரிஷத்தின் இளைஞர் அமைப்பான பஜ்ரங் தள் தீவிர எதிர்ப்பு நடவடிக்கையில் குதித்துள்ளது.

இந்தியாவில் காதலர் தினம் கொண்டாடப்படுவது, கலாசார சீரழிவு என்று வலியுறுத்தி வரும் பஜ்ரங் தள், ஆண்டு தோறும் காதலர் தினக் கொண்டாட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறது.

இந்த நிலையில், பிப்ரவரி 14ம் தேதி, காதலர்கள் பூங்காக்களில் அத்துமீறிய செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதால் அன்றைய தினம் பூங்காக்களை மூடுமாறு காவல்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளது.

இது தொடர்பாக பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கும் சென்று ராஷ்ட்ரிய சுவயம்சேவக் சங்கின் உறுப்பினர்கள் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

காதல் என்பது ஏதோ ஒரே ஒரு நாளில் கொண்டாடப்படும் விஷயம் அல்ல என்பதையும், காதலர் தினம் கொண்டாடுவது இந்திய கலாசாரத்துக்கு உகந்தது அல்ல என்பதையும் அவர்கள் எடுத்துரைத்து வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.