சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியாததால் பிரதமர் மோடி ஏமாற்றம்
தில்லியில் இன்று மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், நேரடியாக சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியாமல் பிரதமர் மோடி ஏமாற்றம் அடைந்தார்.


புது தில்லி: தில்லியில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், நேரடியாக சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியாமல் பிரதமர் நரேந்திர மோடி ஏமாற்றம் அடைந்தார்.
சூரிய கண்ணாடியுடன், சூரிய கிரகணத்தைப் பார்க்க ஆவலோடு இருந்த பிரதமர் நரேந்திர மோடி, சூரிய கிரகணம் நிகழ்ந்தபோது, வானில் மேகமூட்டம் காணப்பட்டதால், நேரிடையாகப் பார்க்க முடியாமல் வருத்தம் அடைந்தார்.
இது பற்றி அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, நாட்டு மக்களைப் போன்றே நானும் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தைப் பார்க்க ஆவலோடு இருந்தேன், மேகமூட்டம் காரணமாக சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியாமல் போனது, ஆனால், கோழிக்கோடு உள்ளிட்ட இடங்களில் தெரிந்த நெருப்புவளைய சூரியகிரகணத்தை நேரலையில் பார்த்தேன். மேலும், நிபுணர்களுடன் உரையாடி சூரிய கிரகணத்தைப் பற்றி தெரிந்து கொண்டேன் என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...