நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியாததால் பிரதமர் மோடி ஏமாற்றம்

தில்லியில் இன்று மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், நேரடியாக சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியாமல் பிரதமர் மோடி ஏமாற்றம் அடைந்தார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:41 pm

ANI

புது தில்லி: தில்லியில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், நேரடியாக சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியாமல் பிரதமர் நரேந்திர மோடி ஏமாற்றம் அடைந்தார்.

சூரிய கண்ணாடியுடன், சூரிய கிரகணத்தைப் பார்க்க ஆவலோடு இருந்த பிரதமர் நரேந்திர மோடி, சூரிய கிரகணம் நிகழ்ந்தபோது, வானில் மேகமூட்டம் காணப்பட்டதால், நேரிடையாகப் பார்க்க முடியாமல் வருத்தம் அடைந்தார்.

இது பற்றி அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, நாட்டு மக்களைப் போன்றே நானும் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தைப் பார்க்க ஆவலோடு இருந்தேன், மேகமூட்டம் காரணமாக சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியாமல் போனது, ஆனால், கோழிக்கோடு உள்ளிட்ட இடங்களில் தெரிந்த நெருப்புவளைய சூரியகிரகணத்தை நேரலையில் பார்த்தேன். மேலும், நிபுணர்களுடன் உரையாடி சூரிய கிரகணத்தைப் பற்றி தெரிந்து கொண்டேன் என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.