2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தேர்வை புறக்கணித்தால் அடுத்த செமஸ்டர் எழுத முடியாது: மாணவர்களுக்கு ஜே.என்.யு எச்சரிக்கை! 

மாணவர்கள் தேர்வு எழுத மறுத்தால், அடுத்த செமஸ்டர் தேர்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகம் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:35 pm

ENS

மாணவர்கள் தேர்வு எழுத மறுத்தால், அடுத்த செமஸ்டர் தேர்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகம் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

விடுதி கட்டண உயர்வு மற்றும் தேர்வுக் கட்டணத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் தில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகவும், தில்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் (ஜே.என்.யு) பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேர்வுகளை நடத்துவதற்கு பல்கலைக்கழகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட போதிலும், மாணவர்கள் தேர்வு எழுத மறுத்து வருகின்றனர். தற்போது நடக்கவுள்ள தேர்வுகளை எழுத மறுப்பவர்கள், அடுத்த செமஸ்டரில் பதிவு செய்ய தகுதியற்றவர்கள் ஆவார்கள். 

மேலும், மாணவர்கள் விடுதி கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை. மாணவர்களின் போராட்டத்திற்கு பிறகு வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு 50% சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிலும் மாணவர்கள் சமாதானம் ஆகவில்லை. 

இதுதவிர மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள், பல்கலைக்கழக மாணவ அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எனினும் மாணவர்கள் சமாதானம் ஆக மறுக்கின்றனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.