அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

நாடாளுமன்ற உறுப்பினராக தொடர ராகுலுக்கு தார்மிக உரிமை இல்லை: ராஜ்நாத் சிங்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி "இந்தியாவில் கற்பழிப்பு" என்ற கருத்தை வெளியிட்டதால் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு "தார்மிக உரிமை" இல்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங்

News image

c04drajnath065053

Updated On :13 டிசம்பர் 2019, 9:47 am

புது தில்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி "இந்தியாவில் கற்பழிப்பு" என்ற கருத்தை வெளியிட்டதால் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு "தார்மிக உரிமை" இல்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

தனது கருத்துக்கு ராகுல் நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தால் மக்களவை ஒத்திவைப்புக்குப் பின்னர் இரண்டாவது முறையாக அவை கூடிய போது மக்களவையில் ராஜ்நாத் சிங் தனது கருத்தை தெரிவித்தார்.

"அவரது கருத்தால் நாட்டு மக்கள் மனவேதனை அடைந்துள்ளனர். வெளியில் அவர் கூறிய கருத்துக்கு வருத்தம் தெரிவிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவே நாங்கள் எங்கள் சகாக்களை இந்த அவையில் அழைத்து வந்தோம். ராகுல் காந்தி இந்த அவைக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். ஒரு எம்.பி.யாக இருக்க அவருக்கு தார்மிக உரிமை இல்லை" என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.