2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

காதலியுடன் சேர மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவன்

கேரளாவில் காதலியுடன் சேர தடையாக இருந்த மனைவியை கணவன் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:29 pm

ENS

கேரளாவில் காதலியுடன் சேர தடையாக இருந்த மனைவியை கணவன் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார்(40) தனது மனைவி வித்யாவை காணவில்லை என்று உதயம்பூர் போலீசில் கடந்த செப்டம்பர்20ம் தேதி புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை செய்துவந்த நிலையில், வித்யாவின் உடல் திருநெல்வேலி பகுதியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

பிரேம் குமாரும், அவரது காதலி சுனிதா பேபியும் இணைந்து செப்டம்பர் 21 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு வில்லாவில் வைத்து வித்யாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இதன்பின்னர் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக திருநெல்வேலியில் உடலை அடக்கம் செய்துள்ளனர். 

​​முதலில், கொச்சி நகர காவல் ஆணையர் இந்த சம்பவத்தின் பின்னணியில் பிரேம்குமார் இருப்பதாக சில தகவல்களை சேகரித்தார். தொடர்ந்து,  டி.சி.பி பூங்குழலியின் கீழ் ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.  மேலும், திருவனந்தபுரத்தின் குற்றப்படை மற்றும் சைபர் செல் உதவியுடன் விசாரணை நடைபெற்றது. இறுதியில் பிரேம்குமாரே, காதலியுடன் இணைந்து மனைவியை கொன்றுவிட்டு போலீசில் நாடகமாடியது தெரிய வந்துள்ளது. 

பிரேம்குமார் காதலியுடன் இணைய மனைவி வித்யா தடையாக இருந்த காரணத்தால் அவரை கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராக சுனிதா பணிபுரிந்து வருகிறார. அவரும் கணவருடன் வாழ பிடிக்காமல் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். பிரேம் மற்றும் சுனிதா இருவரும் சமீபத்தில் சந்தித்த நிலையில், இருவரும் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என வித்யாவை கொலை செய்துள்ளனர்.

தற்போது பிரேம்குமார் மற்றும் சுனிதா ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.