நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

'மக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கையை இழந்த தருணம் இது' - கூறியது யார் தெரியுமா?

மக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கையை இழந்த தருணம் இது என ஹைதராபாத் என்கவுன்டர் குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:25 pm

ANI

மக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கையை இழந்த தருணம் என்று ஹைதராபாத் என்கவுன்டர் குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 4 பேர் வெள்ளிக்கிழமை அதிகாலை போலீஸாரின் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். குற்றவாளிகள் நால்வரும் தப்பிச்செல்ல முயன்றதால் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். 

குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிய நிலையில், குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Story image

இதுகுறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது: நீதித்துறையின் மீது மக்கள் தங்களது நம்பிக்கையை இழந்த தருணம் இது. நீதித்துறையை வலுப்படுத்துவது குறித்து அனைத்து மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து நடவடிக்கை வேண்டும். 

பெண்களுக்கு எதிரான இதுபோன்ற சம்பவங்கள் தாமதமாகவே வெளிச்சத்திற்கு வருகின்றன. உன்னாவ், ஹைதராபாத் சம்பவங்களில் மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். அதன் காரணமாகவே, குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு மக்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.