அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

'உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனடியாக பதவி விலக வேண்டும்' - அகிலேஷ் ஆவேசம்!

உன்னாவ் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். 

News image

அகிலேஷ் யாதவ்

Updated On :5 டிசம்பர் 2019, 11:04 am

உன்னாவ் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், ஓராண்டுக்கு முன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண்ணை, ஜாமீனில் வெளிவந்த  குற்றவாளிகள், பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. 

லக்னௌ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இதில் சம்பந்தப்பட்ட மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளனர். 

இந்நிலையில் பாலியல் குற்றம் புரிந்த ஒருவரை விடுவித்ததனால்தான் பெண் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார் என்பதால், இதற்குப் பொறுப்பேற்று  உத்தப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கோரியுள்ளார். 

மேலும், ஆட்சியில் தொடர்ந்து நீடிப்பதற்கான அதிகாரத்தை யோகி அரசு இழந்து விட்டது என்று கூறிய அவர், நீதித்துறைஇந்த விவகாரத்தில் தலையிட்டு குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணின் சிகிச்சைக்கான செலவை மாநில அரசு ஏற்கும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.அத்துடன், இந்த சம்பவம் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தன்னிடம் சமர்ப்பிக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.