அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

'கேள்விகளின் தரத்தை மேம்படுத்துங்கள்; நேரத்தை வீணாக்காதீர்கள்' - எம்.பிக்களுக்கு சபாநாயகர் அறிவுறுத்தல்! 

நாடாளுமன்றத்தில் பூஜ்ய நேரத்தில் கேட்கப்படும் கேள்விகளின் தரத்தை மேம்படுத்துங்கள் என்று மக்களவை எம்.பிக்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தியுள்ளார். 

News image
Updated On :2 டிசம்பர் 2019, 8:19 am

நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் கேட்கப்படும் கேள்விகளின் தரத்தை மேம்படுத்துங்கள் என்று மக்களவை எம்.பிக்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தியுள்ளார். 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று கேள்வி நேரத்தின்போது எம்.பிக்கள் பலர் நாட்டின் பல்வேறு பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பினர். 

அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, கேள்வி நேரத்தின் போது சபையில் எழுப்பும் கேள்விகளின் தரத்தை மேம்படுத்துமாறு அறிவுறுத்தியதுடன், மாநில பிரச்னைகளை மாநில அரசுகள் தான் கையாள வேண்டும், மத்திய அரசு அதில் தலையிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் ஜாபுவா மற்றும் ரத்லம் பகுதிகளில் உள்ள மூன்று கோவில்களில் குடிநீர் குழாய்களை நிறுவவும், சாலைகள் மற்றும் யாத்ரீகர்கள் தங்கும் இடங்களை அமைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்தியப்பிரதேச மாநிலத்தின் எம்.பி ஒருவர் கேள்வி எழுப்பியபோது சபாநாயகர் மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை வழங்கினார். 

மேலும், 'மாநில அரசின் கீழ் வரும் கோவில்களில் குடிநீர் குழாய்கள் மற்றும் சாலைகளை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியாது. இது மாநில அரசு சம்மந்தப்பட்ட விஷயம். எனவே இவ்வாறான கேள்விகளை கேட்டு நேரத்தை வீணாக்க வேண்டாம்' என்று சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.