குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

பாகிஸ்தான் இல்லைன்னா பங்களாதேஷ்! சுதந்திர தின விழாவையொட்டி, எல்லையில் இனிப்பு பரிமாற்றம்

இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு எல்லையில் இந்திய - பங்களாதேஷ் வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:49 am

ENS

இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு எல்லையில் இந்திய - பங்களாதேஷ் வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். 

நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றியதுடன் மக்களுக்கு உரையாற்றினார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் ஆளுநர் சத்யபால் மாலிக் இன்று கொடியேற்றினார். புதிய யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள லடாக்கிலும் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

வழக்கமாக சுதந்திர தினத்தின் போது எல்லையில் இரு நாட்டு வீரர்களிடையே இனிப்பு பரிமாறிக்கொள்ளப்படும் நிகழ்வு நடைபெறும். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த  முறை இந்திய -பாகிஸ்தான் வீரர்களிடையே இனிப்பு பரிமாற்ற நிகழ்வு நடைபெறவில்லை. இந்திய வீரர்கள் இனிப்பு அளித்த போதிலும், பாகிஸ்தான் வீரர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்ததாகக்  கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்திய -பங்களாதேஷ் எல்லையில் உள்ள எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.