கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

அவித்த முட்டை ரூ.1700 ஆ? அதிர்ச்சிக் கொடுத்த ஹோட்டல்! அப்போ ஆம்லெட்?? அதுவும்..

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் ஏராளமான கோழிப் பண்ணைகள் இருக்கின்றன. இங்கிருந்துதான் பரவலாக முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் இருப்பு மற்றும் தேவைக்கேற்ப முட்டையின் விலை நாமக்கல்லில் ந

News image
Updated On :1 நவம்பர் 2019, 9:45 am


தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் ஏராளமான கோழிப் பண்ணைகள் இருக்கின்றன. இங்கிருந்துதான் பரவலாக முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் இருப்பு மற்றும் தேவைக்கேற்ப முட்டையின் விலை நாமக்கல்லில் நிர்ணயிக்கப்படுகிறது.

சரி இதை எதற்கு சொல்கிறீர்கள் என்று கேட்கிறீர்களா? ஆம் இந்த செய்தியே முட்டையைப் பற்றியது அல்லவா? அதனால் அதன் வரலாறு கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம் என்று நினைத்து இதையெல்லாம் சொல்லிவிட்டோம்.

மன்னிக்கவும் வாருங்கள் நேராக செய்திக்குள் குதிக்கலாம்.

சண்டிகரில் இரண்டு வாழைப்பழங்கள் ரூ.442 பில் போடப்பட்ட சம்பவம் கடந்த மாதம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதற்கு ஒப்பாக தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஒரு பில் எது தெரியுமா, மும்பையில் உள்ள ஃபோர் சீசனல் ஹோட்டல் எனப்படும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இரண்டு அவித்த முட்டையின் விலை ரூ.1700 என்பதுதான். 

கார்த்திக் தார் என்பவர் இந்த பில்லை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். ஒரு  சாதாரண உணவு பொருளான அவித்த முட்டையே இந்த அளவுக்கு பில் போடப்பட்டிருப்பதைப் பார்த்த சமூக வலைத்தளப் போராளிகள் இதனை வைரலாக்கியுள்ளனர்.

Story image

இந்த பில்லில் அவித்த முட்டை மட்டுமல்ல, ஒரு ஆம்லெட் ரூ.850க்கும், இரண்டு ஆம்லெட் ரூ.1700க்கும் பில் போடப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களிடம் இருந்து பலவாறான கருத்துகள் டிவிட்டரில் வந்து குவிந்து வருகிறது.

இங்கு நான்கு பருவக் காலத்துக்குமான ஒட்டுமொத்த காலை உணவுச் செலவை ஒரே காலை உணவுக்கு வாங்கிக் கொள்வார்களோ..

தங்கம் விலையே இதைவிடக் குறைவுதான் போல..

கோழிகள் எல்லாம் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் என்று இன்றுதான் தெரிந்தது என்றெல்லாம் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

இங்க பிரியாணியெல்லாம் வாங்கணும்னா வங்கியில லோன் தான் போடணும் போல இருக்கே அப்படினு நம்ம மைண்ட் வாய்ஸ் சொல்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.