தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் ஏராளமான கோழிப் பண்ணைகள் இருக்கின்றன. இங்கிருந்துதான் பரவலாக முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் இருப்பு மற்றும் தேவைக்கேற்ப முட்டையின் விலை நாமக்கல்லில் நிர்ணயிக்கப்படுகிறது.
சரி இதை எதற்கு சொல்கிறீர்கள் என்று கேட்கிறீர்களா? ஆம் இந்த செய்தியே முட்டையைப் பற்றியது அல்லவா? அதனால் அதன் வரலாறு கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம் என்று நினைத்து இதையெல்லாம் சொல்லிவிட்டோம்.
மன்னிக்கவும் வாருங்கள் நேராக செய்திக்குள் குதிக்கலாம்.
சண்டிகரில் இரண்டு வாழைப்பழங்கள் ரூ.442 பில் போடப்பட்ட சம்பவம் கடந்த மாதம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதற்கு ஒப்பாக தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஒரு பில் எது தெரியுமா, மும்பையில் உள்ள ஃபோர் சீசனல் ஹோட்டல் எனப்படும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இரண்டு அவித்த முட்டையின் விலை ரூ.1700 என்பதுதான்.
கார்த்திக் தார் என்பவர் இந்த பில்லை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். ஒரு சாதாரண உணவு பொருளான அவித்த முட்டையே இந்த அளவுக்கு பில் போடப்பட்டிருப்பதைப் பார்த்த சமூக வலைத்தளப் போராளிகள் இதனை வைரலாக்கியுள்ளனர்.

இந்த பில்லில் அவித்த முட்டை மட்டுமல்ல, ஒரு ஆம்லெட் ரூ.850க்கும், இரண்டு ஆம்லெட் ரூ.1700க்கும் பில் போடப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களிடம் இருந்து பலவாறான கருத்துகள் டிவிட்டரில் வந்து குவிந்து வருகிறது.
இங்கு நான்கு பருவக் காலத்துக்குமான ஒட்டுமொத்த காலை உணவுச் செலவை ஒரே காலை உணவுக்கு வாங்கிக் கொள்வார்களோ..
தங்கம் விலையே இதைவிடக் குறைவுதான் போல..
கோழிகள் எல்லாம் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் என்று இன்றுதான் தெரிந்தது என்றெல்லாம் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
இங்க பிரியாணியெல்லாம் வாங்கணும்னா வங்கியில லோன் தான் போடணும் போல இருக்கே அப்படினு நம்ம மைண்ட் வாய்ஸ் சொல்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வேட்டுவம் வெளியீடு எப்போது?
பெட்ரோல் விலை கடுமையாக உயரும்: ராகுல் காந்தி
லுங்கி இங்கிடி நலமுடன் உள்ளார்: ஐபிஎல் நிர்வாகம் தகவல்

மது, சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: ஜிவி பிரகாஷ்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


