கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

தொடர் குண்டுவெடிப்புக்கு பிறகு எங்கள் கட்சியை சேர்ந்த 7 பேரை காணவில்லை: குமாரசாமி அச்சம்

கர்நாடகாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா சென்ற மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த 7 பேர் மாயமான சம்பவம் அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:43 am

ANI

கர்நாடகாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா சென்ற மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த 7 பேர் மாயமான சம்பவம் அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் திருநாளான ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 8 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளனர், இவர்களில் 5 பேர் இந்தியர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 500-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், கர்நாடகத்தைச் சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியின் 7 பேர் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குப் பிறகு மாயமான சம்பவம் அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சித் தலைவரும், கர்நாடக முதல்வருமான குமாரசாமி கூறியதாவது:

இலங்கைக்கு சுற்றுலா சென்ற எங்கள் கட்சியைச் சேர்ந்த 7 பேரும் அங்கு நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு பிறகு மாயமானது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் 2 பேர் அந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுதொடர்பாக நான் இந்திய தூதரகத்துடன் தொடர்ந்து பேசி தகவல்களை பெற்று வருகிறேன் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.