ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மம்தா முதலில் சாரதா நிதி நிறுவன மோசடி ஆதாரத்தை கண்டுபிடிக்கட்டும்: பிரதமர் மோடி தாக்கு

பாலகோட் விமானப்படைத் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்கும் மம்தா பானர்ஜி, முதலில் சாராதா நிதிநிறுவன மோசடி ஆதாரத்தை கண்டுபிடிக்கட்டும் என பிரதமர் நரேந்திர மோடி பதிலடி அளித்தார். 

News image
Updated On :20 ஏப்ரல் 2019, 10:08 am

பாலகோட் விமானப்படைத் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்கும் மம்தா பானர்ஜி, முதலில் சாராதா நிதிநிறுவன மோசடி ஆதாரத்தை கண்டுபிடிக்கட்டும் என பிரதமர் நரேந்திர மோடி பதிலடி அளித்தார். இதுதொடர்பாக மேற்கு வங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தில் அவர் பேசியதாவது:

பல ஆண்டுகளாக பதவியில் இருந்தும் மேற்கு வங்கத்தின் வறுமை நிலையை மம்தா ஒழிக்கவில்லை. மாநில மக்களின் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை. அதிலும், மேற்கு வங்கத்தின் மாதிரியை ஒட்டுமொத்த தேசத்துக்கும் அமல்படுத்தப்போவதாக மம்தா சூளுரைக்கிறார். அப்படியென்றால் நாடு முழுவதும் உள்ள ஏழைகளை அதே ஏழ்மை நிலையிலேயே வைத்திருக்க நினைக்கிறாரா மம்தா?

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பிரிவினை அரசியலை மட்டுமே ஏற்படுத்தி வந்தது. ஆனால், பாஜக-வின் கொள்கை ஏழைகளின் வளர்ச்சியில் உள்ளது. எனவே இந்த முறை வளர்ச்சியின் வேகத்தடையான மம்தாவுக்கு எதிராக வாக்களிக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். 

வருகிற மே 23-ஆம் தேதி மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் போது, இங்குள்ள சட்டவிரோத குடியேற்றம் தடுக்கப்படும். மாநில வளர்ச்சிக்கு பதிலாக மக்கள் பணத்தை கொள்ளையடித்து மம்தா தன்னை மட்டுமே வளர்த்துக்கொண்டார். அதிலும் முதல் இரண்டுகட்ட தேர்தலுக்குப் பிறகு மம்தா தனது தூக்கத்தை கூட தொலைத்துவிட்டார்.

பாலகோட் விமானப்படைத் தாக்குதல் நடந்தவுடன் அதற்கு ஆதாரம் உள்ளதா என்று கேட்ட மம்தா பானர்ஜி, முதலில் சாரதா நிதி நிறுவன முறைகேடு தொடர்பான ஆதாரங்களை கண்டுபிடிக்கட்டும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.