தனது தந்தை தேவெ கௌடா பிரதமராக இருந்த காலகட்டத்தில் நாட்டில் எந்த பயங்கரவாத தாக்குதலும் நடைபெறாமல் அமைதியாக இருந்ததாக கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறினார். இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
எனது தந்தை தேவெ கௌடா பிரதமராக இருந்த 10 மாத காலம் ஜம்மு-காஷ்மீர் உட்பட நாட்டில் எந்த பயங்கரவாத தாக்குதலும் நடைபெறவில்லை. ஒட்டுமொத்த நாடும் அமைதியாக இருந்தது. இந்தியா, பாகிஸ்தான் இடையே எந்த பிரச்னையும் கிடையாது. ஆனால், பாலகோட் விமான தாக்குதல் மூலம் பிரதமர் மோடி அரசியல் ஆதாயம் தேடுகிறார். நரேந்திர மோடியின் 5 ஆண்டுகால ஆட்சியை விட எனது தந்தையின் 10 மாத கால ஆட்சியே சிறந்தது.
அமைதிக்கான அர்த்தம் என்னவென்று பிரதமர் மோடிக்கு தெரியாது. தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறார். இந்த நாட்டில் பல பிரமதர்கள் ஆட்சி செய்துள்ளனர். இந்தியா, பாகிஸ்தான் இடையே பலமுறை பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆனால், அதையெல்லாம் யாரும் தனது சுய அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தியதில்லை.
நான் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்ததை மக்கள் வரவேற்றுள்ளனர். அதேபோன்று நாளை காங்கிரஸ் ஆட்சியமைத்தால் ராகுலும் தேவே கௌடா போன்று சிறந்த நிர்வாகியாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துவேன். ஏனென்றால் தேவெ கௌடா சிறந்த நிர்வாகி, நல்ல மனிதர், அனுபவமிக்கவர், அரசியலில் அனைவரை விடவும் சிறந்தவர், அவர் ராகுலை ஏற்கனவே பிரதமர் வேட்பாளராக அறிவித்துவிட்டார். மேலும் அவர் தனது அரசியல் அனுபவத்தை ராகுலிடம் அறிவுறுத்துவதாகவும் தெரிவித்துவிட்டார்.
இந்த தேர்தலுடன் பாஜக அரசு வீழ்வது உறுதி. அனைத்து மாநில கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் ராகுல் தலைமையில் ஆட்சி அமையும். அந்த அரசை தேவெ கௌடா நிச்சயம் சிறப்பாக வழிநடத்துவார் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரதமா் மோடியைப் போல பணக்காரா்களுக்கே மம்தா உதவுகிறாா்: ராகுல்

உ.பி.: கங்கை விரைவுச் சாலையை ஏப். 29-இல் திறந்துவைக்கிறாா் பிரதமா்

தோ்தல் பணியில் நோ்மையற்ற நடத்தை: மேற்கு வங்க காவல்துறை அதிகாரிகள் 5 போ் இடைநீக்கம்

1 - 8 வகுப்பு இறுதித் தோ்வு மதிப்பெண்: ஏப். 30-க்குள் பதிவேற்ற உத்தரவு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


