ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

வயநாடு மக்களே.. உங்களுடன் நான்.. ராகுல் உருக்கம்

வயநாடு மக்களுடன் வாழ்நாள் உறவு ஏற்படுத்திக்கொள்ளவே அங்கு போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் உருக்கமாகப் பேசினார்.

News image
Updated On :17 ஏப்ரல் 2019, 11:06 am

வயநாடு மக்களுடன் வாழ்நாள் உறவு ஏற்படுத்திக்கொள்ளவே அங்கு போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் உருக்கமாகப் பேசினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல், சொந்த அமேதி தொகுதி மட்டுமல்லாது கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இரு தொகுதிகளில் அவர் போட்டியிடுவது இதுவே முதன்முறையாகும். இந்நிலையில், வயநாடு தொகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் உருக்கமாக உரையாற்றியதாவது:

நான் பிரதமர் நரேந்திர மோடி போன்று கிடையாது. இங்கு வந்து உங்களிடம் பொய் பேச விரும்பவில்லை. ஏனென்றால், உங்களின் திறமை, அறிவு மற்றும் புரிதல் ஆகியவற்றை நான் மதிக்கிறேன். வெறும் இரு மாத உறவுக்காக நான் இங்கு போட்டியிடவில்லை. உங்களுடன் வாழ்நாள் முழுவதுக்குமான உறவை ஏற்படுத்திக்கொள்ளவே இங்கு களமிறங்கியுள்ளேன்.

இங்கு வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்தாலும், அனைத்து மதம் மற்றும் சாதியினர் ஒற்றுமையுடன் உள்ளீர்கள். இதுபோன்று அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதற்கு கேரளா தான் சிறந்த முன் உதாரணமாக திகழ்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக நாம் அனைவரும் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை எதிர்த்து ஒற்றுமையுடன் போராடியுள்ளோம். ஒருவரே இந்நாட்டை ஆள நினைக்கும் நிலையை எதிர்த்து போராடுகிறோம். 

நான் இந்த நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் சென்றுள்ளேன். ஆனால், இங்கு மட்டும்தான் பலதரப்பட்ட குரல்களும், தத்துவங்களும், சித்தாந்தங்களும் ஒன்றிணைந்து பண்முகத்தன்மை இருப்பதை பார்க்கிறேன். நான் இங்கு ஒரு அரசியல்வாதியாக வரவில்லை. உங்களின் சகோதரனாக, மகனாக வந்துள்ளேன். உங்களின் மனங்களில் உள்ளதை புரிந்துகொண்டு அதன்படி செயல்பட விரும்புகிறேன் என்றார்.

முன்னதாக, வயநாடு தொகுதியில் அமைந்துள்ள திருநெல்லி கோயிலில் தனது தந்தை ராஜீவ் அஸ்தியை கரைத்து சிறப்பு பித்ரு பூஜைகளை மேற்கொண்டு வழிபாடு நடத்தினார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.