ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

காங்கிரஸ் கூட்டணி குறித்து ஆம்ஆத்மி தான் முடிவு செய்ய வேண்டும்: அகமது படேல்

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆம்ஆத்மி தான் முடிவு செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :16 ஏப்ரல் 2019, 6:27 am

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆம்ஆத்மி தான் முடிவு செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில காங்கிரஸ் கூட்டணி அமைக்க தயாராக இல்லை என்று ஏற்கனவே தெரிவித்துவிட்டது. தில்லியிலும் கூட்டணி அமைக்க எங்களுக்கு விருப்பமில்லை. இருப்பினும், ஹரியாணாவில் 4 தொகுதிகள், பஞ்சாப்பில் 5 தொகுதிகள், தில்லியில் 4 தொகுதிகள் வரை ஆம்ஆத்மி கேட்கிறது. 

இருப்பினும் கூட்டணி என்ற பேச்சுக்கே மாநில காங்கிரஸ் தயாராக இல்லாத சூழலில் காங்கிரஸ், ஆம்ஆத்மி கூட்டணி அமைவது சிரமம்தான். மாநில காங்கிரஸ் கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்றாலும், தில்லியில் கூட்டணி அமைக்கலாம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் வலியுறுத்தியுள்ளார்.  

இந்நிலையில், ஹரியாணா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் கூட்டணி அமைத்தால் மட்டுமே தில்லியிலும் கூட்டணி என்று ஆம்ஆத்மி தெரிவித்துவிட்டது. தில்லியில் மட்டும் தான் கூட்டணி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். தில்லியில் அவர்கள் கேட்ட 4 தொகுதிகளையும் ஒதுக்கவும் அவர் ஒப்புக்கொண்டுவிட்டார். ஆனால், அரவிந்த் கேஜரிவால் தான் தன்னுடைய முடிவுகளில் திடீர் பல்டி அடித்து வருகிறார்.

எனவே நேரம் குறைந்து வருவதால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆம்ஆத்மி தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.