ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பயங்கரவாதிகளை வீடு புகுந்து தூக்குவோம்: அமித் ஷா

உத்தரப்பிரதேசத்தில் எந்த வளர்ச்சித் திட்டங்களும் ஏற்படுத்தப்படவில்லை என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா விமர்சித்துள்ளார். 

News image
Updated On :10 ஏப்ரல் 2019, 4:33 pm

கடந்த 55 ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் உத்தரப்பிரதேசத்தில் எந்த வளர்ச்சித் திட்டங்களும் ஏற்படுத்தப்படவில்லை என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக உ.பி.யில் புதன்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

கடந்த 55 ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் உத்தரப்பிரதேசத்தில் எந்த வளர்ச்சித் திட்டங்களும் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால், உ.பி.யின் கடன் மட்டும் அதிகரித்தது. மேலும் நாட்டின் பாதுகாப்பை சீர்குலைப்பதிலும், வாக்கு வங்கி அரசியலில் மட்டுமே காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளது. 

ஜம்மு-காஷ்மீரை தனிநாடாக பிரிக்கப்போவதாக ஒமர் அப்துல்லா கூறியுள்ளது தொடர்பாக காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜவாதி கட்சிகள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனவே இதில் ராகுல், மாயாவதி மற்றும் அகிலேஷ் ஆகியோர் தங்கள் நிலையை தெளிவுபடுத்த வேண்டும். பாஜக தேர்தல் வாக்குறுதியின் படி விவசாயிகளுக்கு 6 ஆயிரம் கோடி உதவித்தொகையும், விவசாயிகளின் ஓய்வு ஊதிய திட்டமும் நிச்சயம் செயல்படுத்தப்படும்.

இனியும் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எதுவும் இல்லை, ஏனெனில் அதனால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்பார். எனவே இனிவரும் காலங்களில் பயங்கரவாதிகள் ஏதேனும் சதிச்செயல்களில் ஈடுபட்டால், அவர்களின் வீடு புகுந்து அழிப்போம் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.