கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்திய தேர்தல் ஆணையத்தை 2 நாள் சிறை வைப்பேன்: அம்பேத்கர் பேரன் கொதிப்பு

தேர்தல் ஆணையத்தை சிறை வைப்பேன் என்று  பிரகாஷ் அம்பேத்கர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :4 ஏப்ரல் 2019, 7:43 am

இந்திய தேர்தல் ஆணையத்தை சிறை வைப்பேன் என்று பாரிபா பகுஜன் மகாசங்க கட்சித் தலைவரும், அம்பேத்கர் பேரனுமான பிரகாஷ் அம்பேத்கர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மஹராஷ்டிர மாநிலம் யவத்மல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரகாஷ் அம்பேத்கர் பேசியதாவது:

ஜனநாயக முறையில், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு புல்வாமா தாக்குதல் குறித்து பேச சுதந்திரம் உள்ளபோதும், அதுகுறித்து பேசக்கூடாது என்று உத்தரவுகள் வருகின்றன. எங்கள் கட்சி மட்டும் ஆட்சிக்கு வந்தால், நாங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தை சும்மா விட மாட்டோம். இந்திய தேர்தல் ஆணையத்தை நிச்சயமாக இரண்டு நாட்களுக்கு சிறை வைப்போம்.

இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். அது பாஜக-வுக்கு ஆதரவாக மட்டுமே செயல்படுகிறது என்று தெரிவித்தார்.

பிரகாஷ் அம்பேத்கர், மஹாராஷ்டிர மாநிலத்தின் சோலாபூர் மற்றும் அகோலா ஆகிய இரு தொகுதிகளிலிருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.