கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

அனைத்து சுகங்களையும் அனுபவித்த பிறகு அமேதியை ராகுல் புறக்கணிப்பது ஏன்? ஸ்மிருதி இராணி

அமேதி தொகுதியை காங்கிரஸ் தலைவர் ராகுல் புறக்கணித்துவிட்டார். இதை அப்பகுதி மக்கள் யாரும் மன்னிக்க மாட்டார்கள் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :4 ஏப்ரல் 2019, 6:08 am

அமேதி தொகுதியை காங்கிரஸ் தலைவர் ராகுல் புறக்கணித்துவிட்டார். இதை அப்பகுதி மக்கள் யாரும் மன்னிக்க மாட்டார்கள் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல், 2019 மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக உத்தரப்பிரதேசத்தின் அமேதி மட்டுமல்லாது கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இந்நிலையில், அமேதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கூறியதாவது:

அமேதி தொகுதிக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது யார்? அமேதி தொகுதியை அதிகமுறை பார்வையிட்டு, மக்களை சந்தித்தவர் யார்? வயநாடு தொகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அமேதியில் இதுவரை என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை வயநாடு மக்கள் தெரிந்துகொண்டால் போதுமானது. 

காங்கிரஸ் தலைவர் ராகுல், அமேதி தொகுதியில் தொடர்ந்து 15 வருடங்களாக பதவியில் உள்ளார். ஆனால், இப்போது மற்றொரு தொகுதியை தேர்ந்தெடுப்பது ஏன்? இது அமேதிக்கு ஏற்பட்ட அவமானம். இதனை அமேதி மக்கள் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

அமேதி தொகுதி மக்களால் தான் ராகுலுக்கு கடந்த 15 ஆண்டுகளாக பதவி கிடைத்தது. அனைத்து சுகங்களையும் அனுபவித்துவிட்டு அமேதி தொகுதியை ராகுல் புறக்கணித்துவிட்டார்.

ஆனால், அமேதி தொகுதியில் எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கியுள்ள பாஜக தலைமைக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் சொந்த தொகுதியாக கருதப்படும் அமேதி தொகுதியிலிருந்து அக்கட்சித் தலைவர் ராகுல், கடந்த 3 முறை மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கு கடந்த முறை (2014) நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் 4,08,651 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். 

அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணி 3,00,748 வாக்குகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.