அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

தலைவருடன் சென்ற தொண்டர்களுக்கு போலீஸார் தடியடி: பரபரப்பை ஏற்படுத்திய விடியோ காட்சி

தலைவருடன் சென்ற தொண்டர்கள் மீது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தடியடி நடத்திய விடியோ காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:34 am

ANI

தலைவருடன் சென்ற தொண்டர்கள் மீது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தடியடி நடத்திய விடியோ காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல் ஆகியவை இணைந்து நடைபெறவுள்ளது. இதையடுத்து ஆளும் தெலுங்கு தேசம், எதிர்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மைலாவரம் பகுதியில் புதன்கிழமை பிரசாரம் செய்தார். ஆளும் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஊடகமும், போலீஸாரும் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

அப்போது, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் போலீஸாருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. மேலும் போலீஸார் மீது ஒய்எஸ்ஆர் கட்சியினர் கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.