அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

கேரளாவில் ராகுலுக்கு எதிராகப் போட்டியிடப் போவது யார்?: அறிவித்தார் அமித் ஷா 

கேரள மாநிலம் வயநாட்டில் ராகுலுக்கு எதிராகப் போட்டியிடப் போவது யார்? என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:32 am

ANI

புது தில்லி: கேரள மாநிலம் வயநாட்டில் ராகுலுக்கு எதிராகப் போட்டியிடப் போவது யார்? என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அமேதி மக்களவைத் தொகுதி, ராகுல் காந்தியின் பாரம்பரிய  தொகுதியாகும். இத்தொகுதியில் வரும் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதேபோல், 2ஆவது தொகுதியாக தென் மாநிலங்கள் ஏதேனும் ஒன்றில் ராகுல் காந்தி போட்டியிட திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன.

இந்நிலையில், கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதை தில்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சருமான ஏ.கே. அந்தோணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது தெரிவித்தார்.

இந்நிலையில் வயநாட்டில் ராகுலுக்கு எதிராகப் போட்டியிடப் போவது யார்? என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

வயநாடு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாரத தர்ம ஜன சேனா அமைப்பின் தலைவரான துஷார் வெல்லப்பலி போட்டியிடுவார் என்பதை பெருமையுடன் அறிவிக்கிறேன். துடிப்பான, இளமையான மற்றும் செயல்திறம் மிக்க தலைவரான அவர், வளர்ச்சி மற்றும் சமூக நீதி தொடர்பான எங்களது கொள்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வார். இத்துடன் கேரளாவின் மாற்று அரசியல் சக்தியாக தேசிய ஜனநாயக கூட்டணி உருவெடுக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் கேரளாவில் பாஜ கட்சியானது பாரத தர்ம ஜன சேனா மற்றும் கேரள காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.