2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

உத்தரப்பிரதேசத்தில் சம்பவம்: காரை நிறுத்தாததால் ஆப்பிள் நிறுவன ஊழியரை சுட்டுக் கொன்ற காவலர்

உத்தரப்பிரதேசத்தில் காரை நிறுத்தாமல் சென்ற ஆப்பிள் நிறுவன ஊழியரைக் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:56 pm

ANI


லக்னௌ: உத்தரப்பிரதேசத்தில் காரை நிறுத்தாமல் சென்ற ஆப்பிள் நிறுவன ஊழியரைக் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவேக் திவாரி என்ற ஆப்பிள் நிறுவன ஊழியர் கோம்தி நகரில் காரில் சென்று கொண்டிருந்த போது, காவல்துறையினர் அவரை நிறுத்துமாறு கூறியுள்ளனர். ஆனால் விவேக் திவாரி காரை நிறுத்தாததால், கார் மீது காவலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.

துப்பாக்கிக் குண்டு பாய்ந்த போது, அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடி விபத்தில் சிக்கியது. படுகாயமடைந்த விவேக் திவாரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

இது பற்றிய முதற்கட்ட விசாரணையில், விவேக் திவாரியை காரை நிறுத்துமாறு கூறிய போது அவர் தலைமைக் காவலரின் இரு சக்கர வாகனத்தின் மீது காரை மோதுவது போல பாசாங்கு செய்ததும், அதனால் அதிர்ச்சியுற்ற காவலர் துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

துப்பாக்கியால் சுட்ட காவலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பிரேத பரிசோதனைக்குப் பிறகே அவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இறந்தாரா அல்லது விபத்தில் சிக்கி காயமடைந்ததால் இறந்தாரா என்பது தெரிய வரும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி விவேக் திவாரியின் மனைவி கல்பனா திவாரி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.