வியாபம் முறைகேட்டில் சிவராஜ் சிங் செளஹானுக்கு தொடர்பு இருப்பதாக, காங்கிரசின் திக்விஜய் சிங் தனிப்பட்ட முறையில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த பொழுது, எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ் சிங் முன்னிலையில் திக்விஜய் சிங் நேரில் ஆஜாராகி சுமார் 2 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார். அப்போது சிவராஜ் சிங் செஹான், மத்திய அமைச்சர் உமா பாரதி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக இந்த முறைகேட்டில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.