2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீதான 'துல்லிய தாக்குதல்': புதிய விடியோ வெளியீடு 

பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் நடத்திய 'துல்லிய தாக்குதல்' தொடர்பான புதிய விடியோ வியாழனன்று வெளியிடப்பட்டுள்ளது. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:55 pm

ANI

புது தில்லி: பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் நடத்திய 'துல்லிய தாக்குதல்' தொடர்பான புதிய விடியோ வியாழனன்று வெளியிடப்பட்டுள்ளது. 

2016, செப்டெம்பர் 16-ஆம் தேதியன்று காஷ்மீரில் ஊடுருவிய பயங்கரவாதிகள் உரி பகுதியில் நடத்திய திடீர் தாக்குதலில் 17 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக, உரி தாக்குதல் நடந்து 10 நாள்களுக்குப் பிறகு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து இந்திய இராணுவம் அங்கிருந்த பயங்கரவாத முகாம்கள் மீது 'துல்லிய தாக்குதல் ' நடத்தியது. 

இந்த துல்லிய தாக்குதலுக்கு எதிர்க்கட்சிகள் ஆதாரம் கேட்டன. துல்லிய தாக்குதல் தொடர்பாக அரசியல் லாபத்துக்காக பிரதமர் மோடி பொய் சொல்வதாக தில்லி முதல்வர் கேஜரிவால் அப்போது குற்றம் சாட்டியிருந்தார். துல்லிய தாக்குதல் சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு, அதற்கான ஆதாரங்கள் அடங்கிய விடியோவை மத்திய அரசு அனுமதியுடன் இந்த ஆண்டு ஜூன் மாதம் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று வெளியிட்டது. அதன் பிறகு அதுதொடர்பான விவாதங்கள் சற்றே ஓய்ந்தன. 

சமீபத்தில் மீண்டும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீர் மாநில காவலர்கள் மூவரை கொடூரமாகக் கொன்ற சம்பவம் நடந்தது. அதற்கு எதிர்வினையாக மீண்டும் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்படும் என்று ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்திருந்தார்.  

இந்நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் நடத்திய 'துல்லிய தாக்குதல்' தொடர்பான புதிய விடியோ வியாழனன்று வெளியிடப்பட்டுள்ளது. 

இன்னும் இரு நாட்களில் 'துல்லிய தாக்குதல்' நடவடிக்கையின் இரண்டாவது ஆண்டுவிழா கொண்டாடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

விடியோ :
 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.